×

குமரி கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பார்வையாளர் திடீர் ஆய்வு

நாகர்கோவில், மார்ச் 29: கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளர் சேஷகிரி பாபு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), கண்காணிப்பு அலுவலர்கள் வாணி, ஷீலா ஜாண், ஜான் ஜெகத் பிரைட், உதவி தேர்தல் அலுவலர்கள் கனகராஜ், சுப்புலட்சுமி, முதன்மை பயிற்சியாளர் மற்றும் தனி தாசில்தார் சுப்பிரமணியன், தேர்தல் தாசில்தார் வினோத், தேர்தல் துணை தாசில்தார் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குமரி கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பார்வையாளர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kumari Collector Office ,Nagercoil ,Seshakiri Babu ,Kanyakumari ,Parliamentary ,General ,Election ,Vilavankodu Assembly ,District Returning Officer ,District Collector ,Nanjil ,District Collector's Office ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...