×

தஞ்சாவூரில் இருந்து கோவை, தூத்துக்குடிக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

 

தஞ்சாவூர், மார்ச் 27:தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சாவூர் மாவட்ட த்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து கோயமுத்தூருக்கும், தூத்துக்குடிக்கும் தலா 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு பொது வினியோக திட்டத்திற்காகவும் நேற்று சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரில் இருந்து கோவை, தூத்துக்குடிக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Coimbatore ,Tuticorin ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...