×

அரசு பஸ் மீது கல்வீச்சு; 3 பேர் கைது

திருப்பூர், மார்ச் 27: கோவையிலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பொங்கலூர் சர்வோதய சங்கம் அருகே சென்றபோது திடீரென அந்த வழியாக வந்த 3 மர்ம ஆசாமிகள் பஸ் மீது கல்லை தூக்கி வீசி உள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த என்சன் ராஜா (38) என்பவரும், கண்டக்டர் தங்கராஜ் (36) என்பவரும் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து இருவரும் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பொங்கலூர் தேவனம்பாளையத்தை சேர்ந்த அருண் குமார் (27), பொங்கலூரை சேர்ந்த கதிரேசன் (21), மஞ்சப்பூரை சேர்ந்த அசோக்குமார் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, இவர்கள் எதற்காக கல் வீசினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post அரசு பஸ் மீது கல்வீச்சு; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Stone ,Tirupur ,Coimbatore ,Trichy ,Pongalur Sarvodaya Sangam ,Dinakaran ,
× RELATED வெள்ளிங்கிரி மலையேறிய வாலிபர் தவறி விழுந்து பலி: உயிரிழப்பு 8 ஆக உயர்வு