×

திங்கள்சந்தை அருகே வியாபாாியை டெம்போ ஏற்றி கொல்ல முயற்சி

 

திங்கள்சந்தை, மார்ச் 24 : திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன்(56). இவர் தனது வீடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஸ்ரீகண்டன் தனது மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டெம்போவை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் (36) என்பவர் ஸ்ரீகண்டன் மீது டெம்போவால் மோத முயன்றதாக தெரிகிறது. இதை கண்டதும் ஸ்ரீகண்டன் ஒதுங்கிக் கொண்டார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ஸ்ரீகண்டன் வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து சுஜித் ஸ்ரீகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து டெம்போவுடன் தப்பிச் சென்று விட்டார். சுஜித் மீது இரணியல் காவல் நிலையத்தில் ஸ்ரீகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து சுஜித்தை தேடி வருகின்றனர்.

The post திங்கள்சந்தை அருகே வியாபாாியை டெம்போ ஏற்றி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Tags : Vyapai ,Srikandan ,Thalakulam ,Dinakaran ,
× RELATED தலக்குளத்தில் ஒன்றரை ஆண்டில் பழுது...