×

மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா?.. புதுச்சேரியில் செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால் பாதியில் வெளியேறிய தமிழிசை..!!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வருகை தந்தார். இதையொட்டி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் அரசியல் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் தொடுத்தனர். மக்களை அனைவரும் தன்னை விரும்புவதாக கூறும் நீங்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் தோற்றது ஏன்?.

எந்த தொகுதியில் நிற்க போகிறீர்கள். எதை முன்வைத்து வாக்கு சேகரிப்பீர்கள். மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா? எனது உள்ளிட்ட செய்தியர்களின் கேள்விக்கு பெரும்பாலும் சிரிப்பையே குலுங்கி குலுங்கி பதிலாக அளித்த தமிழிசை சௌந்தரராஜன், திடீரென பாதியிலேயே எழுந்து புறக்கணித்தார். முன்னதாக ஆளுநர் மாளிகையில் தமிழிசையை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தேர்தலில் போட்டியிடும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழிசையின் ஆளுநர் பணி நன்றாக இருந்தது என்று தெரிவித்தார்.

The post மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா?.. புதுச்சேரியில் செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால் பாதியில் வெளியேறிய தமிழிசை..!! appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Puducherry ,Former ,Governor ,Tamilisai Soundararajan ,House ,
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை