×

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, டிச.3: ஏற்காட்டில் சாரல் மழையுடன், குளுகுளு பனிமூட்டத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சேலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழையும், பனி நிலவியதால், குளுமையான சீதோஷ்ணத்தை அனுபவித்தவாறு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்தனர். ஏரியில் திரளான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். சாலையோர கடைகளில் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் இன்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem ,Dinakaran ,
× RELATED மணம் தரும் நெய் மிளகாய் பயிரிட நீலகிரி விவசாயிகள் அதிக ஆர்வம்