×

கரூரில் பனிப்பொழிவு அதிகரிப்பு; பூக்கள் விலை உயர்வு

கரூர், டிச. 3: பனிப் பொழிவு காரணமாக கரூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கரூர் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு கரூர் மாவட்டம், திண்டுக்கல், சேலம், திருச்சி போன்ற மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பூக்கள் ஏலம் விடப்படுகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் தேவைக்கு ஏற்ப பூக்களை ஏலம் எடுத்துச் சென்று வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக மழைக்கு பதிலாக அதிகாலை நேரங்களில் அதிகளவு பனிபொழிவு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் வரத்தும் மிகவும் குறைவாவே இருந்து வருகிறது.

பூக்கள் வரத்து குறைவால் வழக்கமான ஏலம் விடப்படும் விலையை விட பூக்களின் விலையும் சற்றே அதிகரித்த நிலையில் ஏலம் விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் முகூர்த்த நாட்கள் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினர்களும் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். பனிப்பொழிவின் தாக்கம் குறைந்த பிறகுதான் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரிக்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post கரூரில் பனிப்பொழிவு அதிகரிப்பு; பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Railway Station… ,Dinakaran ,
× RELATED குட்காவை பதுக்கி வைத்து விற்க முயன்றவர் மீது வழக்கு