×

‘தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி அண்ணாமலைதான்’

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அமலாக்கத்துறையில் யார் குற்றம் செய்திருந்தாலும் தவறு, தவறுதான். தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மணல் குவாரி குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுகவினர் பயந்து நடுங்கவில்லை.

அரசியல்வாதிகள் மெச்சூரிட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜ தலைவர் அண்ணாமலைதான். சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றும் அளவுக்கு செயல்படுகிறார், என்று அவர் பதில் அளித்தார்.

The post ‘தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி அண்ணாமலைதான்’ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Tamil Nadu ,Villupuram ,Former ,AIADMK ,minister ,CV ,Shanmugam ,
× RELATED என்கவுன்டர் தொடர்பாக யார் மீது...