கரூர், நவ. 25: வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் வகையில் கரூர் மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் சரக்கு வாகனங்கள் செல்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் அதிகளவு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்காக ஜல்லிக் கற்கள், செங்கல் போன்ற பொருட்கள் அதிகளவு வாகனங்களின் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இது போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர், வேன் போன்ற வாகனங்கள் திறந்த நிலையில் செல்கின்றன. அவ்வாறு மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளின் வழியாக செல்லும் போது, காற்றின் காரணமாக தூசு பறந்து, பின்னால் இரு சக்கர வாகனங்களின் வருபவர்களின் கண்களை பதம் பார்க்கிறது. இதுபோன்ற நிலைகளால் அவ்வப்போது சிறு,சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கட்டுமான பொருட்களை திறந்த நிலையில் ஏற்றிச் செல்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோல மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
The post கரூர் மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் செல்லும் சரக்கு வாகனங்கள் appeared first on Dinakaran.
