×

கடலூரில் புதிய பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: கடலூரில் புதிய பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் கடலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 18.26 ஏக்கர் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எம். புதூருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச் சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 6ம் தேதி கடலூர் மாநகராட்சி தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post கடலூரில் புதிய பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : bus station ,Cuddalore ,Edapadi Palanisamy ,Chennai ,Legislative Opposition Leader ,Edappadi ,New Bus Station ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்