
திருப்பூர், செப்.30: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பூலத்துடன் பூ,வளையல் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. மேலும், 5 வகையான சாப்பாடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி,தம்பி கோவிந்தராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், திமுக மாவட்ட நிர்வாகி திலக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருப்பூரில் சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.