×

அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு

தென்காசி, மார்ச் 28: வீரகேரளம் புதூர் தாலுகா, அச்சங்குட்டத்தில் சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து தென்காசி கலெக்டரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீரகேரளம் புதூர் தாலுகா அச்சங்குட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை விரிவாக்கம் செய்ய தடையில்லா சான்று கோரி வரப்பெற்ற மனுவினை சரிவர களப்பணி விசாரணையின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இம்மனுவை ஊர் பொதுமக்கள் சார்பில் ராஜேந்திரன் அளித்தார்.  அப்போது, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், வக்கீல் பிரிவு மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், மாவட்டத் துணைத்தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் குளத்தூரான், முருகன் மற்றும் தென்காசி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், அச்சங்குட்டம் ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Achankutam ,
× RELATED அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட...