×

கிணற்றில் விழுந்து முதியவர் பலி

செங்கோட்டை, பிப். 27: தென்காசி அருகே நன்னகரத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (65). மனநிலை சற்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர், இலத்தூர் அச்சன்புதூர் சாலையில் நேற்று
நடந்து சென்றுகொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக அப்பகுதி தோப்பில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த  இலத்தூர் போலீசார், செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் முதியவர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...