×

கடன் தொகையை மோசடி செய்த வாலிபர் கைது

நெல்லை, மார்ச் 23: நெல்லை டவுனில் தனியார் நிறுவனத்தின் கணக்கில் கூடுதலாக கடன் பெற்று வசூலித்த தொகையை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் கடை நடத்தி வருபவர் குணசீலன் (55). மேலும் இவர் தனியார் நிறுவனத்தின் விநியோகஸ்தராக இருந்து நிறுவன பொருட்களை விற்று வந்தார். இதனிடையே இவரது கடையில் வேலை பார்த்த மாரியப்பன் (30) என்பவர், நிறுவனத்தின் கணக்கில் கூடுதலாக ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, வாடிக்கையாளரிடம் வசூலித்த ரூ.7.85 லட்சத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த குணசீலன் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மாரியப்பனை கைது செய்தார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...