×

விபத்தில் தொழிலாளி பலி

எட்டயபுரம், மார்ச்19:  விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டியை சேர்ந்த மொட்டையன் மகன் அந்தோணி (60). கூலி தொழிலாளியான இவர் நேற்று எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு மொபட்டில் திரும்பி சென்றார். எட்டயபுரம் அடுத்த கழுகாசலபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதியதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே  பலியானார்.

தகவலறிந்து எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து லாரி டிரைவர் பிள்ளையார்நத்தம் கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...