பொன்னமராவதி, மார்ச் 19: பொன்னமராவதி அருகே உள்ள அச்சுக்காட்டுப்பட்டியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் மேற்கொண்டனர். அப்பொழுது போலீசாரை கண்டவுடன் பொக்லைன் இயந்திரத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அங்கு சென்ற போலீசார் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.