×

பெண்ணை ஏமாற்றிய அசாம் வாலிபர் கைது

திருச்சி, மார்ச் 19: திருச்சியில் பெண்ணை ஏமாற்றிய அசாம் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதர்அலி (22) என்ற வாலிபரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்ததால், அந்த பெண் கர்ப்பமடைந்தார். தொடர்ந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதற்கிடையில் திருமணம் செய்து கொள்வதாக கூறிய, காதர்அலி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அசாமுக்கு சென்று விட்டார்.

Tags : Assam ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...