×

கரூர் டவுண் டிஎஸ்பி பொறுப்பேற்பு

கரூர், மார்ச்18: கரூர் டவுன் டிஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டிருந்த சரவணன் நேற்று கரூர் வந்து டவுன் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தேவராஜ், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சரவணன், கரூர் டவுன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்று மதியம் கரூர் வடிவேல் நகரில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்துக்கு வந்த அவர், கரூர் நகர டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags : Karur Town DSP ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா