×

குழந்தையுடன் பெற்றோர் மாயம்

மதுரை, மார்ச் 17: மதுரை கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(70). இவரது மகன் அரவிந்த்ராஜ் (37), இவர் தனது மனைவி கார்த்திகை திலகா(31), மகன் வெற்றிவேல் (7). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த தொகையை குறிப்பிட்ட தேதியில் அவர்களால் திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அரவிந்த்ராஜ், அவரது மனைவி கார்த்திகை திலகா மற்றும் மகன் வெற்றிவேல் ஆகிய 3 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து குழந்தையுடன் மகன், மருமகள் மாயமானது குறித்து ராஜன், திருப்பாலை போலீசில் ராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு