×

செய்துங்கநல்லூர் பகுதியில் 1.200 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது.

தூத்துக்குடி, மார்ச் 17: செய்துங்கநல்லூர் பகுதியில் 1.200 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி தீபு தலைமையிலான போலீசார், செய்துங்கநல்லூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவ்வழியாக வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Karadanganallur ,
× RELATED 3 மாதங்களுக்கு முன் வெள்ளத்தில்...