×

தணிக்கையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு

கரூர்: நாமக்கல், கருர் சரக கூட்டுறவு தணிக்கைத்துறை தணிக்கையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களாக நடைபெற்றது. பயிற்சியை சேலம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் முருகன் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டகூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் ஜூலியா சாம்ராஜ், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் சுமதி முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டுறவு தணிக்கை அலுவலர் பாலாஜி வரவேற்றார். கரூர் கூட்டுறவு தணிக்கை அலுவலர் சுதா நன்றி கூறினார். இதில் நாமக்கல், கரூர் மாவட்ட கூட்டுறவு தணிக்கை துறை தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...