×

ஆலங்குடி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

ஆலங்குடி, ஆக. 2: ஆலங்குடி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
ஆலங்குடி ஆண்டிகுளம், அரசமரம் பஸ் ஸ்டாப் பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை
பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆலங்குடி கல்லுகுண்டு கரையை சேர்ந்த முருகேசன் (51), அறந்தாங்கி அருகே அத்தாணி ஆவாகுளம் கோங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Alangudi ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...