×

பூட்டிய வீட்டில் 4 பவுன் தாலிச் சரடு, பணம் திருட்டு

திண்டிவனம், மே 26: திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி ராதா(65). இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வீட்டின் கதவின் மேல் வீட்டின் சாவி மற்றும் பீரோ சாவியை மறைத்து வைத்துவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். மீண்டும் மாலை வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தாலிச் சரடு, 1500 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராதா மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டை திறந்து தங்க நகை மற்றும் பணம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு