×

பிளஸ் 2 தேர்வுகள் 34,041 பேர் எழுதினர்

மதுரை, மே 21: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. இயற்பியல் தேர்வை 19,172 பேரும், பொருளியல் தேர்வை 13,715 பேரும், கணினி தொழில்நுட்ப தேர்வை 1,154 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 41 பேர் எழுதியுள்ளனர். இவர்களில் 358 தனித்தேர்வர்களும், சிறைவாசிகள் 6 பேரும் அடங்குவர். மேலும் இயற்பியலில் 594 பேரும், பொருளியலில் 782 பேரும், கணினி தொழில்நுடப தேர்வில் 120 பேரும் என மொத்தம் 1,496 பேர் தேர்வு எழுதாமல்
ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...