×

வாளுடன் சுற்றிய வாலிபர் கைது

கமுதி, மே 19: கமுதி அருகே வாளுடன் சுற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன்(41). இவர், எருமைகுளம் விலக்குப் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கையில் வாளுடன் சுற்றித் திரிந்தார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார், வாளுடன் சுற்றிய காளீஸ்வரனை கைது செய்தனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா