×

பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா தீச்சட்டியுடன் பக்தர்கள் ஊர்வலம்

சிங்கம்புணரி, ஏப்.20: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  இதில் முக்கிய விழாவான தீச்சட்டி எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. நந்தவனத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் 51, 21 தீச்சட்டிகளை சுமந்து காரைக்குடி ரோடு பெரிய கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு  சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு முளைப்பாரி, மாவிளக்கு வைத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் உறவின்முறையாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Pathirakaliamman Temple Festival ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...