×

பள்ளியில் புரெஜெக்டர் திருட்டு

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் அருகே நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை ஜன.13ல் வழக்கம் போல் பள்ளியை மூடி விட்டு, அறை சாவி, மெயின்கேட் சாவியை பள்ளிக்கு அருகில் கடை வைத்துள்ள கண்ணனிடம் தலைமையாசிரியை சிலம்புசெல்வி ஒப்படைத்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளியை திறந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி இருந்ததால், கணினி ஆய்வகத்திற்கு சென்றபோது அங்கிருந்த புரெஜெக்டரை காணவில்லை. 2019ல் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.19ஆயிரம் மதிப்புள்ள புரொஜெக்டரை கணினி ஆய்வக பூட்டை திறந்து யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில், வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு