×

பரமக்குடி அருகே விவசாயி கொலையில் 2 பேர் கைது

பரமக்குடி, டிச. 5:  பரமக்குடி  அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு (42). விவசாயி. இவர் டிச.ம் தேதி தனது வயலுக்கு சென்றார்.  மாலை வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் திருநாவுக்கரசை தேடி வயல்  பகுதிக்கு சென்றனர். அங்கு கண்ணில் ரத்த காயத்துடன் வாய்க்காலுக்குள்  தண்ணீரில் மூழ்கியபடி திருநாவுக்கரசு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து  நயினார்கோவில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வந்தனர். திருநாவுகரசு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக  குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், உடலை வாங்க மாட்டோம் என  உறவினர்கள் தெரிவித்து ராமநதாபுரம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில்  ஈடுபட்டனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என  எஸ்பி கார்த்திக் உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள், திருநாவுக்கரசு உடலை  வாங்கி சென்றனர்.

இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்  பேரில் கொலூரை சேர்ந்த ஜீவானந்தம் (9), இவரது நண்பர் கிளியூரை சேர்ந்த  முத்துப்பாண்டி (9) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில்  ஜீவானந்தம், முத்துப்பாண்டி ஆகியோரது உறவு பெண்களுடன் திருநாவுக்கரசு  தொடர்பு வைத்திருந்ததால் கம்பால் அவரை தாக்கி வாய்க்கால் தண்ணீருக்குள்  மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்  கைது செய்தனர்.

Tags : Paramakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்