×

சாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

சாத்தூர், ஏப். 17: சாத்தூர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் ெகாண்டனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சாத்தூர் நகராட்சி நிர்வாகம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ெசலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. நகரில் மாஸ்க் அணியாதவர்களை முறையாக கண் காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது.சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். இதுவரை 2800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags : Corona vaccination ,Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது