×

மனைவியை மிரட்டிய கணவன் கைது

தண்டையார்பேட்டை: எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(33). பெயிண்டர். இவரது மனைவி தேவி. ரமேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், விரக்தியடைந்த தேவி கோபித்துக்கொண்டு நேதாஜி நகரில் உள்ள தாய் சாந்தி வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், மாமியார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தனது மனைவியை வீட்டிற்கும் வரும் படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். தகவலறிந்த எண்ணூர் போலீசார் அங்கு வந்து ரமேஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...