×

ரயில்வே ஊழியர் தற்கொலை

புழல்: புழல் அடுத்த செகரட்டரி காலனி 12வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(57). ரயில்வே டெக்னீஷியன். இவருக்கு இரண்டு முறை கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் கண் வலியால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மொட்டை மாடியில் தூங்க செல்வதாக கூறி சென்றுள்ளார். நேற்று காலை வெகுநேரம் வராததால் வீட்டில் உறவினர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, தண்ணீர் டேங்க் இரும்பு ஏணியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை பார்த்த அவரது மனைவி பார்வதி(50) புழல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...