புதுடெல்லி: தமிழ்நாட்டில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்ப டிப்புகளுக்கான 2025-2026-ம் கல்வியாண்டு கலந்தாய்வில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது வரையில் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘தமிழ்நாட்டில் காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை ஒன்றிய அரசிடம், தமிழக ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 28ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழக அரசு மருத்துவர்களுக்கான சேவை ஒதுக்கீடுகள் பாதிப்படையும். எனவே 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மாநிலத்திலேயே தகுதியான மருத்துவர்களை நிரப்ப வேண்டும். இதற்காக உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்த மனுவை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை விரைந்து விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.
