×

மதுரையில் தொடர் மின்தடை: மக்கள் மறியல்

மதுரை: மதுரை மாவட்டம் கூடல்புதூர் அருகே தினமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் நீண்ட நேர மின்தடை ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மின் செயற்பொறியாளர், இதுபோன்ற குறைகள் மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்று உறுதிமொழி கடிதம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Madurai ,Dinamani Nagar ,Koodalputur ,
× RELATED ஒகேனக்கல் – நீர்வரத்து 500 கனஅடியாக சரிவு