கடலூர்: கடலூர் புதுவண்டிபாளையம் விநாயகர் கோயில், அதை சுற்றிய பகுதிகளில் அதிக மின் அழுத்தம் காரணமாக 250க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
