சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடமாக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய வழித்தடத்தில் சென்ற புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
