×

பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்: அமைச்சர் வன்னி அரசு பேட்டி

ரிஷிவந்தியம்: அமைச்சர் தர்மேந்திரபிரதான் ராஜினாமா போதாது, பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அத்தியூரில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு அளித்த பேட்டி:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டுமே போதாது. ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு முறை என்பதே ஒரு மிகப்பெரிய ஊழல்.

இது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதைத் தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட ஒரு சனாதன யுக்தி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. அம்பேத்கரின் சிலை, விரைவில் எனது தலைமையில் சேலத்தில் பிரம்மாண்டமான முறையில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய் கர்நாடகா செல்வது தேவையற்றது
‘‘கர்நாடகா காவிரியில் நீரை திறக்க மறுத்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாஜ மற்றும் காங்கிரஸ் இணைந்து தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிறது. எனவே கர்நாடகவுக்கு முதல்வர் விஜய் செல்வது தேவையற்றது” என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

Tags : Minister Vanni Arusa ,Rishivandhiyam ,Minister ,Dharmendra Pradhan ,Modi ,Vanni Arusa ,Athiyur ,Vanapuram, Kallakurichi district ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...