புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் சுற்றுப்பயணமாக மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். பயணத்தின் முதல் கட்டமாக, டெல்லியில் இருந்து நாளை மால்டோவா நாட்டிற்கு செல்கிறார்.
தொடர்ந்து, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வடக்கு மாசிடோனியாவிற்கு செல்கிறார். 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ருமேனியாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
