சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சிக்காக தொண்டர்கள் தியாகம் செய்தால் அதிகாரத்தை பயன்படுத்தி எந்த கட்சியும் அரசு வேலை தந்ததில்லை. மக்கள் வரிப்பணத்தில் தவெக கட்சியை வளர்க்க நினைக்கிறார். கரூர் நெரிசல் சம்பவம் நடந்து 285 நாட்கள் கழித்து முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
