செய்யாறு ஜூலை 10: செய்யாறு அருகே பயிர் கடன் ரத்து செய்யகோரி விவசாயிகள் ஆவேசமாக பேசிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பெண் அதிகாரி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். அப்போது வங்கி செயலாளராக பணிபுரிந்து வரும் சாந்தியிடம் பெண் விவசாயிகள் சிலர் தமிழக அரசு முழு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.
