புதுடெல்லி: இஸ்லாமியராக மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் ரத்து செய்தது. இது இஸ்லாமியர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘ உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
