×

தாமரை விதையின் மக்கானா மகிமை!

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக மக்கானா என்று சொல்லப்படும் தாமரை விதையில் இருந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளும் உணவுகளும் மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவாக மாறிவருகிறது. இதற்கு அதன் மொறுமொறுப்பு தன்மையும், சுவையும், ஆரோக்கிய நன்மைகளுமே காரணம். தாமரை விதையில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

தாமரை விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அற்புதமான உணவாகும். இதில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இது குறைந்த கலோரிகளையே கொண்டுள்ளதால், அனைவருக்கும் ஏற்ற உணவாகவும் உள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் தான் மக்கானா அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை தாமரை விதைகளிலிருந்து பெறப்படுகின்றன. தாமரை விதை காய்களை கொண்டுள்ளது, ஒவ்வொரு காய்களிலும் தோராயமாக 20 விதைகள் இருக்கும்.

இந்த விதைகள் 40 நாட்களுக்குள் முதிர்ச்சியடைந்து, பின்னர் அதிக தீயில் வறுத்தெடுக்கப்படும். அதிக தீயில் வறுக்கும்போது, வெளிப்புற ஓடு உடைந்து, அதனுள்ளே உள்ள வெள்ளைநிற பருப்பு வெளியே வரும். இந்த வெள்ளை நிற பருப்புகளே மக்கானா என்று அழைப்படுகிறது.

மக்கானா உடலுக்கு தரும் நன்மைகள்

*மக்கானா புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பிற நுண்ணூட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.

*தாமரை விதைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது குளுக்கோஸ் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

*மக்கானா ஒரு சிறந்த குறைந்த கலோரி சிற்றுண்டி. உடல் எடையை குறைக்க விரும்பு பவர்கள் இதனை தேர்வு செய்யலாம்.

*மக்கானாவை தொடர்ந்து உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

*வயிற்றுப்போக்கு சிகிச்சை மற்றும் நிறுத்த பாரம்பரிய மருத்துவத்தில் மக்கானா பயன்படுத்தப்படுகிறது.

*மக்கானாவில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

*மக்கானாவில் உள்ள அமினோ அமிலங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க பயன்படுகிறது.

*மக்கானா கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது எலும்புகளின் வலிமையை உருவாக்க உதவுகிறது.

*மக்கானாவில் நல்ல அளவு தியாமின் உள்ளது. இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. தாமரை விதையில் உள்ள மாவுச்சத்து மெதுவாக ஜீரணமாகி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தாமரை விதைகள் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். இந்த நார்ச்சத்துக்கள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

 

Tags :
× RELATED வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!