மதுரை: மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர தனி நபர்கள் ஆய்வு செய்யவும், வீடியோ எடுத்து பதிவிடவும் அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ரீல்ஸ் எடுப்பதற்காக ஆய்வு என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களில் புகுந்து ஆளுங்கட்சியினர் பிரச்னை செய்வதாகக் குறிப்பிட்டு தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
