புதுவை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது தாய், தந்தை மற்றும் தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து தப்பிய ஸ்வேதா புதுச்சேரியில் போலீசார் கைது செய்தனர். பிரியாணி கடை அருகே நின்றுகொண்டிருந்த ஸ்வேதாவை போலீசார் விசாரித்ததில் கொலை செய்து தப்பித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து புதுச்சேரி விரைந்த பெங்களூரு கே.எஸ்.புரம் போலீசார் ஸ்வேதாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன் கென்னத் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
