ஓசூர்: தமிழ்நாடு -கர்நாடகா மாநில எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான தனியார் பள்ளி அருகில் வீடு கட்டுமான பணிகள் மேற்கொண்டு வந்தனர். இதற்காக அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, 6 அடி நீளம்கொண்ட நல்ல பாம்பு ஒன்று சீறியபடி இருந்தது. அதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரர் சதாமுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த சதாம், மறைந்திருந்த நல்ல பாம்பை பாதுகாப்பாக பிடித்தார். பின்னர், அந்த நல்லபாம்பின் மீது தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தியதுடன், சாக்கு பைக்குள் போட்டு எடுத்துச்சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.
