கன்னியாகுமரி: சுவாமிதோப்பு பகுதியில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக போலீசில் பெண் புகார் அளித்துள்ளார். தேநீர் கடை நடத்தும் வள்ளிமயில் என்பவர் பைனான்சியர் சரவணனிடம் வட்டிக்கு ரூ.50,000 கடன் பெற்றுள்ளார். ரூ.50,000க்கு ரூ.12,000 வட்டி எடுத்துக் கொண்டு ரூ.38,000 மட்டுமே பைனான்சியர் சரவணன் கொடுத்துள்ளார். தொடர்ந்து 100 நாள்கள் தினமும் ரூ.500 கொடுத்து ரூ.50,000-ஐ கட்டிய நிலையிலும் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியுள்ளார்.
