சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
2025-26ம் கல்வியாண்டிற்கான அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, 2026-27ம் கல்வியாண்டு பொது இட மாறுதலுக்கான கலந்தாய்வு 2026 ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. முறையான நெறிமுறைகளை பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்திட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
