சென்னை: பழனி, சமயபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து ஜூலை 22 வரை விண்ணப்பம் பெறப்படுகிறது. கோயில்களின் விவரம், விண்ணப்பிக்க தகுதி உள்ளிட்ட தகவல்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
