×

ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி

கோவை, மார்ச் 8: கோவையில் 25 அரசு மருத்துவமனைகள், 79 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை தொடர்ந்து மார்ச் 1-ம் தேதியில் இருந்து பொது மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக பொது மக்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`கோவையில் பொது மக்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கோவையில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்’ என்றனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை