- நகர்ப்புற மேம்பாட்டு
- அமைச்சர்
- ராஜ்குமார்
- சென்னை
- முதல் அமைச்சர்
- ஜோசப் விஜய்
- வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தித் திணைக்களம்
- வீட்டுவசதி மற்றும்
- நகர அபிவிருத்தி
- சிஎம்டிஏ கட்டிடம்
- சென்னை, கோயம்பெட்
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்
- நகர்ப்புற அபிவிருத்தி ஆணையத்தின் அல
- நகர்ப்புற புதுப்பித்தல் ஆ
சென்னை: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று சென்னை, கோயம்பேடு, சிஎம்டிஏ கட்டடத்தில் உள்ள நகர் ஊரமைப்பு ஆணையரகம் அலுவலகக் கூட்டரங்கில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக அமைச்சர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கு நகர் ஊரமைப்பு துறையில் உதவி இயக்குநர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் நிர்வாக அமைப்பு, துறை கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கிய கூறுகள், புவிசார் தகவல் அமைப்பு அடிப்படையிலான முழுமைத் திட்டம், திட்டக் குழுமங்களின் அமைப்பு மற்றும் உறுப்பினர் நியமனங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதிகள், ஒற்றைச் சாளர இணையதள வசதி, சுய சான்றிதழ் திட்டத்தின் முன்னேற்றம், மலையிடப் பாதுகாப்பு குழுமம், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள்/ மனைகளை வரன்முறைப்படுத்துதல், அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள் வரன்முறைப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் இரா.கிர்லோஷ் குமார், நகர் ஊரமைப்பு ஆணையர் கிரண் குராலா, கூடுதல் இயக்குநர் ப.ரங்கநாதன், இணை இயக்குநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
