×

திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் தவெக நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ரூ.72 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு தவெக நிர்வாகி ராஜா தலைமறைவாகி விட்டதாக போலீசில் கோபி புகார் அளித்துள்ளார். பணத்தை இழந்த கோபி அளித்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Takeka ,Raja ,Tricendur ,Thoothukudi ,Dweka ,Thiruchendur ,Gobi ,Aral Dweka ,City ,
× RELATED 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது...